செவிலியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ஒரத்தநாடு வட்டம், வடக்கூரில் பகுதிநேர செவிலியரை தாக்கிய இரண்டு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஒரத்தநாடு வட்டம், வடக்கூரில் பகுதிநேர செவிலியரை தாக்கிய இரண்டு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யா (26) என்பவர் தொகுப்பு ஊதியத்தில் பகுதி நேர செவிலியராக பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை அதே ஊரை சேர்ந்த திருவாசகம் மகன் கணபதி, ராமமூர்த்தி மகன் சிவக்குமார் ஆகிய இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்து ரத்த காயங்களுடன் இரவு வடக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வந்தனராம். அப்போது, ஐஸ்வர்யா தனது ஓய்வு அறையில் இருந்து வெளியே வந்துள்ளார். குடிபோதையில் இருந்த கணபதி, சிவக்குமார் இருவரும் ஏன் காலதாமதமாக வருகிறாய் என்று கூறி ஐஸ்வர்யா மீது செருப்பை எடுத்து வீசி, தகாத வார்த்தையால் திட்டி, கழுத்தை பிடித்து நெரித்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்த மருத்துவமனை ஊழியர் கூச்சலிட்டதால் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனராம். இதுகுறித்து ஐஸ்வர்யா அளித்த புகாரின்பேரில், ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.