முகப்பு
தஞ்சாவூர்

சுபாஷ் சந்திரகபூர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சுபாஷ்சந்திரகபூர் மீதான வழக்கு ஜன. 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 25 டிசம்பர் 2018, 9:46 am IST
பகிர்:

கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சுபாஷ்சந்திரகபூர் மீதான வழக்கு ஜன. 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு உடையார்பாளையம் அருகேயுள்ள சித்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் 20 சிலைகளும், ஸ்ரீபுரந்தான் பிரகதீசுவரர் கோயிலில் 8 சிலைகளும் திருட்டு போனது. மேலும், விருதுநகர் மாவட்டம் பழுவூர் சிவன் கோயிலில் 2006 ஆம் ஆண்டு 6 ஐம்பொன் சிலைகள் காணாமல்போனது. இந்த மூன்று  வழக்குகளிலும் அமெரிக்காவைச் சேர்ந்த சுபாஷ் சந்திரகபூரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த மூன்று வழக்குகளும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த விசாரணை ஜன. 7-ம் தேதிக்கு நீதிபதி அய்யப்பன்பிள்ளை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments