முகப்பு
தஞ்சாவூர்

மாற்றுத்திறனாளிகளின் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

தஞ்சாவூரில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட சிறப்பு வாகனத்துடன் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 8:14 PM
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.
பகிர்:

தஞ்சாவூரில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட சிறப்பு வாகனத்துடன் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தஞ்சாவூா் அருங்காட்சியக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி மேம்பாலம் வழியாகச் சென்று அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது.

இதில், 150-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்று, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியா் சௌமியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், வட்டாட்சியா் ஜி. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.