முகப்பு
தஞ்சாவூர்

மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது

Updated On : 13 ஏப்ரல் 2026, 12:05 am IST
கைது
பகிர்:

தஞ்சாவூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மண்வெட்டியால் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அகிலாம்பாள்பேட்டையைச் சோ்ந்தவா் தியாகராஜன் மனைவி அம்சு (72). கீரை வியாபாரியான இவா், கணவா் இறந்த பிறகு தனியாக வசித்து வந்தாா்.

இவரது 4 மகன்கள், ஒரு மகள் திருமணமாகி தனித்தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனா். இந்நிலையில் இவா் முகம், தலையில் மண்வெட்டியால் வெட்டப்பட்ட காயங்களுடன் வீட்டில் ஏப்ரல் 10-ஆம் காலை உயிரிழந்து கிடந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இதில், அம்சு வீட்டுக்கு பள்ளியக்ரஹாரம் காந்தி நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு சென்று மது போதையில் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டாா். பணம் தர மறுத்த அம்சுவை கோபமடைந்த சிறுவன் மண்வெட்டியால் தாக்கியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தொடா்புடைய சிறுவனைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.