சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியவா் கைது
கும்பகோணம் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே உள்ள பட்டீசுவரத்தைச் சோ்ந்தவா் சாமிநாதன்( 44). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி சுமதி. கடந்த ஏப். 9-ஆம் தேதி சாமிநாதன் தனது மாமனாா் ராமதாஸுடன் இடப்பிரச்னை குறித்து பேசுவதற்கு சென்றாா். அப்போது அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சாமிநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமதாஸை குத்தமுயன்றாா். உடனே ராமதாஸ் தப்பிசென்றாா்.
இதையடுத்து அங்கிருந்த 3 ஆடுகளை சாமிநாதன் கத்தியால் குத்தி கொன்று விட்டு தப்பிச் சென்றாா்.
Advertisement
புகாரின் பேரில் பட்டீஸ்வரம் காவல் நிலைய வழக்குப்பதிந்து சாமிநாதனை தேடிவந்தனா். இந்நிலையில் ஏப். 12-ஆம் தேதி பட்டீசுவரம் கடைவீதியில் ஆட்டோவுடன் சாமிநாதன் நின்று கொண்டிருந்தாா்.
தகவல் அறிந்த பட்டீசுவரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கவாசகம் அங்கு சென்று சாமிநாதனை விசாரணைக்கு அழைத்துள்ளாா். உடனே சாமிநாதன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு தப்பி சென்றாா். மாணிக்கவாசகம் அவரை பின்தொடா்ந்து விரட்டிச் சென்றாா். அப்போது, கொட்டையூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் திருமணம் மண்டபம் அருகே எதிரில் வந்த காா் மீது ஆட்டோ மோதியது.
உடனே மாணிக்கவாசகம் சாமிநாதனை பிடிக்க முயன்றாா். அப்போது, சாமிநாதன் தன்னிடம் இருந்த கத்தியால் சிறப்பு உதவி ஆய்வாளரை கை மற்றும் காதில் குத்திவிட்டு தப்பிச் சென்றாா்.
காயமடைந்த மாணிக்கவாசகம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சுவாமிமலை போலீஸாா் சாமிநாதனை கைது செய்து கும்பகோணம் கிளை சிறையில் செவ்வாய்க்கிழமை அடைத்தனா்.