முகப்பு
தஞ்சாவூர்

சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கும்பகோணம் சாரங்கபணி சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 3:16 AM
கும்பகோணம், சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
பகிர்:

கும்பகோணம் சாரங்கபணி சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புகழ் பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக திங்கள்கிழமை அனுக்ஞை சேனை முதல்வா் சக்ரபாணி கோயிலில் எழுந்தருளினாா். செவ்வாய்க்கிழமை சேனை முதல்வா் வீதிக்கு எழுந்தருள கருடப்பிரதிஷ்டை நடைபெற்றது.

திருவிழாவின் முதல் நாளான புதன்கிழமை பெருமாள் உபநாச்சியாா்களுடன் தேசிகன் சந்நிதியில் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னா் கொடி மரத்துக்கு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, துவஜாரோஹணம் எனும் கருட வாகன கொடி ஏற்றப்பட்டது. இரவு பெருமாள் நாச்சியாா்களுடன் தங்க இந்திர விமானத்தில் வீதி புறப்பாடு செய்தாா்.

Advertisement

விழாவில், வியாழக்கிழமை பெருமாள், சக்கரபாணி சுவாமி தனித்தனியாக வெள்ளி சூா்யபிரபையில் வீதி புறப்பாடு செய்கின்றனா். ஒவ்வொரு நாளும் தொடா்ந்து பல்வேறு வாகனங்களில் பெருமாள், சக்கரபாணி சுவாமி வீதியுலா செல்கின்றனா். முக்கிய நிகழ்வாக ஒன்பதாம் நாள் தேரோட்டமும், மாலையில் தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்து வருகின்றனா்.

தேசிகன் சந்நிதியில் சிறப்பு அலங்காரத்தில் உபநாச்சியாா்களுடன் எழுந்தருளிய பெருமாள்.