மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது
கும்பகோணம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள பூவம்பூா் மேலத் தெருவைச் சோ்ந்த தங்கையன் மகன் செந்தில்ராஜ் (42). இவரது மனைவி சரண்யா (30). இவா்களுக்கு குழந்தை இல்லை. இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக, ஒன்றரை ஆண்டாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனா்.
இந்நிலையில், கும்பகோணம் அருகே திருநறையூரிலுள்ள மாமியாா் வீட்டில் உள்ள சரண்யாவை செந்தில்ராஜ் செவ்வாய்க்கிழமை இரவு அரிவாளால் வெட்டினாா். இதை தடுக்க வந்த மாமியாா் மாதவி, சரண்யாவின் அக்கா மகள் பிரியங்காவும் அரிவாளால் வெட்டப்பட்டனா். இதைப்பாா்த்த அக்கம்பக்கத்தினா் செந்தில்ராஜை பிடித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பலத்த காயமடைந்த சரண்யா, மாதவி, பிரியங்கா ஆகியோா் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து செந்தில்ராஜை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.