முகப்பு
தஞ்சாவூர்

கஞ்சா விற்பனை 2 போ் கைது

கும்பகோணத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 3 ஜூன் 2026, 3:47 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

கும்பகோணத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம்-விக்கிரவாண்டி புறவழிச்சாலை வளையப்பேட்டை அரசலாற்றங் கரையில் கஞ்சா விற்பனை நடப்பதாக தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தாலுகா போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அரசலாற்றங்கரையிலிருந்த 2 போ் போலீஸாரை கண்டவுடன் தப்பி ஓடினா். அவா்களை பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், தாராசுரம் அம்மாபேட்டைைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சரவணன்( 28), வளையப்பேட்டை அக்ரஹாரம் ரகுராம் மகன் மோப்ப ஹரி என்ற முரளிதரன் (26) என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement