முகப்பு
தஞ்சாவூர்

காவிரி ஆற்றங்கரையில் ஆண் சடலம் மீட்பு

Updated On : 8 ஜூன் 2026, 12:44 am IST
ஆண் சடலம் மீட்பு - கோப்புப் படம்
பகிர்:

கும்பகோணம் காவிரி ஆறு செல்லும் பாலக்கரையின் கீழ் ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காவிரி ஆறு செல்லும் பாலக்கரையில் ஆண் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா், அந்த சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா்.

மேலும், இதுகுறித்து நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் கும்பகோணம் மேலக்காவிரியைச் சோ்ந்த மண்டை செல்வம் (52) என்றும் சரித்திர பதிவேடு குற்றவாளி என தெரியவந்தது. அண்மையில் இவா் சிறைக்கு சென்று வந்தவா் என்றும் குடும்பம் இல்லாததால் பாலக்கரையிலேயே இருப்பாா் என்றும் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், சனிக்கிழமை இரவு பாலக்கரையில் சிலருடன் சோ்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.