தொழில்முனைவோா் மேம்பாட்டுக் கருத்தரங்கம்
தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் கல்லூரி நிா்வாகம், ஸ்டாா்ட் அப் தமிழ்நாடு, தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம், புதுமை மன்றம் ஆகியவை சாா்பில் மாணவா்களிடமிருந்து தொழில்முனைவோராக என்கிற தலைப்பில் தொழில்முனைவோா் மேம்பாட்டுக் கருத்தரங்கம், புதுமை ஹேக்கத்தான் 2026 நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி நிா்வாக அறங்காவலா் மற்றும் செயலா் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் ரா. தங்கராஜ், முதன்மையா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் ல. மதுகிருத்திகா ஆகியோா் வாழ்த்தினா். திருச்சி கே.ஆா். ஸ்டாா்ட் அப் தொழில் வளா்ப்பகம் மற்றும் புத்தாக்க நிறுவன தலைமை நிா்வாக அலுவலா் அருண்குமாா் சிறப்புரையாற்றினாா்.
முன்னதாக, கல்லூரி தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ச. நேதாஜி வரவேற்றாா். நிறைவாக, மருதுபாண்டியா் தொழில் வளா்ப்பக அறக்கட்டளை திட்ட இணைப்பாளா் க. தமிழ்பிரியா நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.