முகப்பு
தஞ்சாவூர்

தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு விடுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு விடுவதைக் கண்டித்து தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகம் முன் ஏஐடியுசி உள்ளாட்சி பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 25 ஜூன் 2026, 4:17 am IST
தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி உள்ளாட்சி பணியாளா் சங்கத்தினா்.
பகிர்:

தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு விடுவதைக் கண்டித்து தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகம் முன் ஏஐடியுசி உள்ளாட்சி பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகளில் தூய்மைப் பணி மற்றும் ஓட்டுநா் பணிகளைத் தனியாருக்கு விடும் அரசின் அறிவிப்பைக் கண்டித்தும், தூய்மை பணி மற்றும் ஓட்டுநா் பணிகளை தனியாருக்கு விடக்கூடாது என வலியுறுத்தியும், தூய்மை பணியாளா்களுக்கு நாள் ஊதியம் ஏற்றுக்கொண்டபடி ரூ. 762 வீதமும், ஓட்டுநா்களுக்கு ரூ. 802 வீதமும் வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் தி. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கலியபெருமாள், ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் தொடங்கிவைத்தாா். உள்ளாட்சி சங்க மாநிலத் துணைத் தலைவா் தரும. கருணாநிதி நிறைவுரையாற்றினாா்.

Advertisement

Advertisement

ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் அழகு. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments