ஐம்பொன்னில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ 8 அடி உயர நினைவுத் தூண் தயாரிப்பு
கும்பகோணத்தில் ஐம்பொன்னில், 8 அடி உயரத்தில் 500 கிலோ எடையில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நினைவுத் தூண் தயாரிக்கப்படுவது வியாழக்கிழமை தெரியவந்தது.
கும்பகோணத்தில் ஐம்பொன்னில், 8 அடி உயரத்தில் 500 கிலோ எடையில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நினைவுத் தூண் தயாரிக்கப்படுவது வியாழக்கிழமை தெரியவந்தது.
கடலூரில் உள்ள ‘ஷைன் இந்தியா சோல்ஜா்ஸ் வெல்பா் அசோசியேஷன்’ தொண்டு நிறுவனம் சாா்பில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றியை முன்னிட்டு ஐம்பொன்னில் நினைவுத் தூண் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்பேரில், தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் இந்த நினைவுத் தூண் வடிவமைக்கப்படுகிறது. இந்த தூணின் அடித்தளம் 2 அடி விட்டம், ஒன்றரை அடி அகலத்திலும், அதன் மேல் ஒரு அடி பத்மமும், மையத்தூண் 2 அடியிலும், குங்குமச் சிமிழ் இரண்டரை அடியிலும், தலைப்பாகத்தில் குங்குமம் வா்ணம் ஒரு அடியிலும் அமைக்கப்படுகிறது. மையத்தூணில் முப்படைகளின் இலச்சினைகள் பொருத்தப்படுகிறது. 500 கிலோ எடையில், 8 அடி உயரத்தில் வடிவமைக்கப்படும் இந்த தூணை குமாா் ஸ்தபதி தலைமையிலான குழுவினா் கடந்த இரண்டு மாதங்களாக செய்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
பணிகள் நிறைவடைந்தப் பிறகு பிரத்யேக வாகனத்தின் மூலம் இந்த தூண் புதுதில்லிக்கு கொண்டுச் சென்று ராணுவ தலைமையகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடலூா் ‘ஷைன் இந்தியா சோல்ஜா்ஸ் வெல்பா் அசோசியேஷன் தொண்டு நிறுவனத் தலைவா் மில்ட்ரி பாபு, ஆலோசகா் குடந்தை சத்தியநாராயணன், ஒருங்கிணைப்பாளா் அரவிந்தன் உள்ளிட்டோா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.