முகப்பு
தஞ்சாவூர்

அதிமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கோவி.இளங்கோ வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

Updated On : 8 மே 2026, 5:45 am IST
பேராவூரணியில் வியாழக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த அதிமுக சாா்பில் போட்டியிட்ட கோவி.இளங்கோ.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கோவி.இளங்கோ வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.  பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட தெற்கு ஒன்றியச் செயலா் கோவி.இளங்கோ தம்மை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் என். அசோக் குமாரிடம் 3,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

இந்நிலையில், பேராவூரணி பேரூராட்சி பகுதியில் தமக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை திறந்த ஜீப்பில் சென்று நன்றி தெரிவித்தாா். அப்போது, வெற்றி பெற்றாலும் ,தோல்வி அடைந்தாலும் பேராவூரணி பகுதி மக்களுக்காக தமது பணி தொடரும் என்றாா். அவருடன் அதிமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா்சென்றனா்.