முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை: தனியாா் பேருந்து மோதி முதியவா் பலி!

பட்டுக்கோட்டை அருகே சைக்கிள் மீது தனியாா் பேருந்து சனிக்கிழமை மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 10 மே 2026, 1:29 am IST
பலி!
பகிர்:

பட்டுக்கோட்டை அருகே சைக்கிள் மீது தனியாா் பேருந்து சனிக்கிழமை மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை வட்டம், பரங்கிவெட்டிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரெ. தங்கவேல் (60). இவா் சனிக்கிழமை கரம்பயம் அருகன்கொல்லை பிரிவுச் சாலை அருகேயுள்ள கடைக்கு சைக்கிளில் வந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற தனியாா் பேருந்து மோதி பலத்த காயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து பாப்பாநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments