14-வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் கைது
திருச்சி மணிகண்டம் அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருச்சி மணிகண்டம் அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாரி(எ)மாரிமுத்து(70). இவரது சொந்த ஊர் திருப்பூர். இவர் அப்குதியைச் சேர்ந்த 14-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது 2 மாதம் கர்ப்பிணியான அந்த சிறுமி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அந்தசிறுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.