உலக பாரம்பரியத் தினம்: ரயில் அருங்காட்சியகத்தை பார்க்க அனுமதி இலவசம்
உலக பாரம்பரியத் தினத்தையொட்டி திருச்சி ஜங்சனில் உள்ள ரயில்வே அருங்காட்சியகத்தை பொதுமக்கள் புதன்கிழமை ( ஏப்.18) இலவசமாகப் பார்வையிடலாம்.
உலக பாரம்பரியத் தினத்தையொட்டி திருச்சி ஜங்சனில் உள்ள ரயில்வே அருங்காட்சியகத்தை பொதுமக்கள் புதன்கிழமை ( ஏப்.18) இலவசமாகப் பார்வையிடலாம்.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டசெய்திக்குறிப்பு: உலக பாரம்பரிய தினம் உலகம் முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பாரம்பரியம் நமது சொத்து என்பது குறித்த விழிப்புணர்வை சிறுவர்கள் மத்தியில்ஏற்படுத்தும் வகையில் தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளை ரயில்வே அருங்காட்சியகத்தில் காலை 10 மணி முதல் 11 மணி வரை நடத்துகிறது.
மேலும், பாரம்பரிய தினத்தையொட்டி அருங்காட்சியகத்தை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவர். 12 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் அருங்காட்சியகத்தில் உள்ள சிறுவர் ரயிலில் புதன்கிழமை இலவசமாக செல்வதற்கும் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.