பெரியார், எம்.ஜி.ஆர். நினைவு தினம்: சிலைகளுக்கு கட்சியினர் மரியாதை
பெரியார் , எம்.ஜிஆர். நினைவு தினத்தையொட்டி திருச்சியில் உள்ள அவர்களது சிலைகளுக்கும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் , எம்.ஜிஆர். நினைவு தினத்தையொட்டி திருச்சியில் உள்ள அவர்களது சிலைகளுக்கும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக : கண்டோன்மென்ட் நீதிமன்றம் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் கே.கே. பாலசுப்பிரமணியம் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமமுக சார்பில் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் தலைமையிலும், தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் டி.வி. கணேஷ் தலைமையிலும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் சிலைக்கு... : மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு, தி.க. சார்பில் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் கட்சியினரும் பெரியார் கல்வி நிறுவனங்கள் அனைத்திலிருந்தும் நிர்வாகிகள், மாணவ, மாணவிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அதிமுக, திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முசிறி: அதிமுக சார்பில் பேரூர் கழக செயலர் சுப்பிரமணியன் தலைமையில் முன்னால் எம்எல்ஏ பிரின்ஸ் தங்கவேல் முன்னிலையில் அதிமுகவினர் முசிறி கைகாட்டியில் எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அமமுக சார்பில் முசிறி கைகாட்டியில் நகரச் செயலாளர் பேங்க் ராமசாமி தலைமையில் அக்கட்சியினர் எம்ஜிஆர் படத்துக்கு மரியாதை செய்தனர். தொட்டித்தில் வாணப்பட்டரை மைதானத்தில் ஒன்றியச் செயலாளர் பால்மணி தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.