விமான நிலையத்தில் ரூ.3.22 லட்சம் தங்கம் பறிமுதல்
சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.22 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.22 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்த ஸ்கூட் விமானப் பயணிகளின் உடைமைகளை, வான் நுண்ணறிவு சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, திருச்சியைச் சேர்ந்த சின்னச்சாமி (22) தனது உடலுக்குள் 2 தங்கச் சங்கிலிகளை மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. 100 கிராம் எடை கொண்ட இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்து 22 ஆயிரம். உரிய அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட இந்த தங்கச் சங்கிலிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், சின்னச்சாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.