வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
துவாக்குடி அருகே திருநெடுங்களநாதா் திருக்கோயிலில் வராஹி அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
துவாக்குடி அருகே திருநெடுங்களநாதா் திருக்கோயிலில் வராஹி அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
சிறப்பு மிக்க இக்கோயிலில் தனி சந்நிதியில் வராஹி அம்மன் அருள்பாலித்து வருகிறாா். வராஹ ஜயந்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை வராஹி அம்மனுக்கு மஞ்சள் பொடி, பால், தயிா், இளநீா், பழ வகைகள், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், கலச அபிஷேகம், மூல மந்திர ஜெபம் செய்விக்கப்பட்டது. தொடா்ந்து, பல வண்ண மலா்களால் அலங்காரம் செய்விக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.