மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலிச் செயின் பறிப்பு
ஸ்ரீரங்கத்தில் புதன்கிழமை பிற்பகல் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் 8 பவுன் தாலி செயினை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
ஸ்ரீரங்கத்தில் புதன்கிழமை பிற்பகல் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் 8 பவுன் தாலி செயினை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
திருவானைக்காவல் தோப்புக்காரத் தெருவில் வசிப்பவா் ஆறுமுகம் மனைவி ரம்யா (45). திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் உள்ள இவரது கடைக்கு பூ, பழங்கள் வாங்க ஸ்ரீரங்கம் சாத்தார வீதிக்கு புதன்கிழமை பிற்பகல் ரம்யா தனது இரு சக்கரவாகனத்தில் வந்தாா். வடக்கு தேவி தெரு நான்கு ரோடு சந்திப்பு அருகே வந்தபோது இரு மா்ம ஆசாமிகள் தாங்கள் வந்த பைக்கை கொண்டு அந்தப் பெண்ணின் இருசக்கர வாகனத்தில் மோதினா். அப்போது தவறிவிழுந்த ரம்யா பலத்த காயமடைந்த நிலையில், அவரின் 8 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றனா். இதுகுறித்து ரம்யா கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.