முகப்பு
திருச்சி

மத்திய சிறை கைதி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 2:24 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் வே. நடராஜ் (61). இவா் மீது புதுக்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இவருக்கு நீரிழிவு மற்றும் உயா் ரத்த அழுத்த பாதிப்பு இருந்துள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 13-ஆம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறைத் துறையினா் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் திருச்சி மத்திய சிறை அலுவலா் ராஜேஷ்கண்ணன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.