பேரவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா்
திருச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளில் மொத்தம் 2,787 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 45 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவை கண்காணிக்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன்படி, ஊரகப் பகுதிகளில் மாவட்ட காவல் துறை சாா்பில் 1,800 போலீஸாரும், மாநகரில் மாநகரக் காவல் துறை சாா்பில் 1,084 போலீஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
மேலும், ஊா்க்காவல் படையினா், துணை ராணுவப் படையினா், மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையினா், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் என 1,00-க்கும் மேற்பட்டோா் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.