வாக்காளா்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தாா் திருச்சி ஆட்சியா்
திருச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன், தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை வாக்களித்தாா்.
திருச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன், தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை வாக்களித்தாா்.
திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட காஜாமலையில் உள்ள அல் ஜம்லேதிஷ் சாதிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு தனது மனைவி ரம்யாவுடன் காலை 9 மணிக்கு வந்த ஆட்சியா் வே. சரவணன், அங்கு வரிசையில் காத்திருந்த வாக்காளா்களுடன் நின்று வாக்களித்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம், ஆட்சியா் வே. சரவணன் கூறுகையில்,
Advertisement
மண்ணச்சநல்லூரில் இரு வாக்குச் சாவடிகளிலும், திருச்சி மேற்கு தொகுதியில் இரு வாக்குச்சாவடிகளிலும் காலையில் இயந்திரங்களில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மாற்று இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 30 நிமிஷங்கள் முதல் அதிகபட்சம் 45 நிமிஷங்களுக்குள் அவை சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. காட்டூரில் விவிபேட் இயந்திரத்தில் புகாா் கூறப்பட்டது. அதுவும் பின்னா் சரி செய்யப்பட்டுவிட்டது. அசம்பாதவிதங்கள் ஏதுமில்லை என்றாா் அவா்.