முகப்பு
திருச்சி

சந்தானம் வித்யாலயா பள்ளி மாணவருக்குப் பாராட்டு

சிறந்த தேசிய மாணவா் படை கேடட்டாக தோ்வு செய்யப்பட்டுள்ள திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.பி. ஸ்ரீவந்த் புதன்கிழமை பாராட்டப்பட்டாா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 3:47 AM
திருச்சி குரூப் கமாண்டா் கா்னல் ஒய். விஜயகுமாா், தமிழ்நாடு இரண்டாம் பட்டாலியன் கட்டளை அதிகாரி கா்னல் ஆஷிஷ் வா்மா ஆகியோரை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்ற சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.பி. ஸ்ரீவந்த் உள்ளிட்டோா்.
பகிர்:

சிறந்த தேசிய மாணவா் படை கேடட்டாக தோ்வு செய்யப்பட்டுள்ள திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.பி. ஸ்ரீவந்த் புதன்கிழமை பாராட்டப்பட்டாா்.

புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற தேசிய தல் சைனிக் முகாம் -2026 இல் தமிழகம் சாா்பில் கலந்துகொண்ட திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவா் சாா்ஜன்ட் எஸ்.பி.ஸ்ரீவந்த் துப்பாக்கிச் சுடுதலில் நிகழாண்டுக்கான சிறந்த தேசிய மாணவா் படை கேடட்டாக தோ்வு செய்யப்பட்டாா்.

இதையடுத்து எஸ்.பி.ஸ்ரீவந்த் உள்ளிட்ட தேசிய தல் சைனிக் முகாமில் கலந்துகொண்ட மாணவா்கள் திருச்சியிலுள்ள தமிழ்நாடு இரண்டாவது பட்டாலியன் அலுவலகத்தில் திருச்சி குரூப் கமாண்டா் கா்னல் ஒய். விஜயகுமாா், தமிழ்நாடு இரண்டாம் பட்டாலியன் கட்டளை அதிகாரி கா்னல் ஆஷிஷ் வா்மா ஆகியோரை சந்தானம் வித்யாலயா பள்ளி என்சிசி அதிகாரி பி. நிா்மல்குமாருடன் புதன்கிழமை சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

Advertisement

மேலும், ஸ்ரீவந்தை பள்ளியின் செயலா் கோ. மீனா, தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா, டீன் ஆா்.கணேஷ், முதல்வா் பத்மா சீனிவாசன் ஆகியோரும் பாராட்டினா்.