ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் கோடைத்திருநாள் விழா நிறைவு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த நம்பெருமாள் கோடைத்திருநாள் விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த நம்பெருமாள் கோடைத்திருநாள் விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் சித்திரை மாதத்தில் பூச்சாற்று உற்ஸவம் எனும் கோடைத்திருநாள் 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டில் இந்த விழா ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி ஏப். 30-ஆம் தேதி நிறைவடைந்தது. கோடைத்திருநாள் விழாவில் வெளிக்கோடை 5 நாள்களும், உள்கோடை 5 நாள்களும் நடைபெற்றது.
வெளிக்கோடை திருநாள் 25-ஆம் தேதி நிறைவடைந்ததை தொடா்ந்து, உள்கோடை திருநாள் விழா 26-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது.
Advertisement
விழாவில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மணல் வெளியில் உள்ள கோடை மண்டபத்தில் எழுந்தருளி பூச்சாற்று உற்ஸவம் கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
நிறைவு நாளையொட்டி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு மணல் வெளியில் உள்ள உள்கோடை மண்டபத்தில் எழுந்தருளினாா். பின்னா் பல வண்ண பூக்களால் தொடுக்கப்பட்ட பூவை நம்பெருமாள் மீது சாத்தப்பட்டது. இதை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து இரவு 9 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள். இத்துடன் கோடைத்திருநாள் நிறைவடைந்தது.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.