FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

போதை மாத்திரைகள் விற்ற பெண் உள்பட இருவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

- சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, காவல் ஆய்வாளா் வெற்றிவேல் தலைமையிலான போலீஸாா் அங்கு சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அரியமங்கலம் பாப்பம்மாள் காலனி ரயில்வே கடவுப்பாதை அருகே போதை மாத்திரைகள் விற்ற சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த எஸ். தேவி (43) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல, ஸ்ரீரங்கம் அம்பேத்கா் நகா் கல்லறைத் தோட்டம் அருகே போதை மாத்திரைகள் விற்ற பாலக்கரை பகுதி என். ரகுராம் (23) என்பவரை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 83 போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள், கைப்பேசி, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments