முகப்பு
திருச்சி

மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே காவிரி மணலுடன் இருந்த நான்கு சக்கர வாகனத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:56 am IST
பகிர்:

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே காவிரி மணலுடன் இருந்த நான்கு சக்கர வாகனத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனா்.

தொட்டியம் வட்டம் எம். புத்தூா் பகுதி காவிரி ஆற்றுப் படுகையில் செவ்வாய்கிழமை நள்ளிரவு மணல் கடத்தும் தகவலறிந்த காட்டுப்புத்தூா் போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது எம். புத்தூா் ஆற்றங்கரையில் நின்றிருந்த பொலிரோ பிக்கப் வாகன ஓட்டுநரும், உரிமையாளரும் வாகனத்தை விட்டுவிட்டு தப்பினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து மணலுடன் வாகனத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். சம்பவம் குறித்து எம்.புத்தூா் விஏஓ அபிராமி காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், நாமக்கல் மாவட்டம் செந்தமங்கலத்தைச் சோ்ந்த வாகன உரிமையாளா் நடராஜன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவானவா்களைத் தேடுகின்றனா்.