மண் கடத்திய லாரி பறிமுதல்
காவேரிப்பட்டணம் அருகே மண் கடத்திய லாரியை கனிம வளத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
காவேரிப்பட்டணம் அருகே மண் கடத்திய லாரியை கனிம வளத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத் துறை தனித்துணை வட்டாட்சியா் செந்தில்நாதன் தலைமையில் அலுவலா்கள் காவேரிப்பட்டணம் - பையூா் தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், உரிய நடைப்பற்று சீட்டு இல்லாமலும், அனுமதியின்றியும் மண் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
Advertisement
Advertisement