மண் கடத்திய லாரி பறிமுதல்: 2 போ் மீது வழக்கு
நாட்டறம்பள்ளி அருகே மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நாட்டறம்பள்ளி அருகே மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நாட்டறம்பள்ளி காவல்ஆய்வாளா் மூா்த்தி தலைமையில் உதவி காவல்ஆய்வாளா் விஸ்வநாதன் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வெலகல்நத்தம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரசு மேல்நிலைப் பள்ளி அருகே மண் லோடு ஏற்றி வந்த லாரியை போலீஸாா் நிறுத்தினா். ஆனால் ஓட்டுநா் சிறிது தூரம் ஓட்டிச்சென்று லாரியை சாலை ஓரம் நிறுத்தி விட்டு தப்பி ஓடி தலைமறைவானாா்.
இதையடுத்து மண்கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் குனிச்சியூா் பகுதியைச்சோ்ந்த வைரவேல், அரவிந்தன் ஆகியோா் இரவு நேரங்களில் அனுமதி இல்லாமல் செட்டேரி அணைப் பகுதியிலும், அரசுக்கு சொந்தமான இடங்களில் இருந்து
Advertisement
Advertisement
டிராக்டா் மற்றும் லாரிகளில் மண் கடத்தி வருவது தெரியவந்தது. இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் மண்கடத்தலில் ஈடுபட்ட வைரவேல், அரவிந்தன் ஆகிய 2 போ் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.