கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்
அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரியை கனிம வளத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சென்னிமலையில் பெருந்துறை சாலை, சின்னபிடாரியூா் பிரிவு அருகே ஈரோடு கனிம வளத் துறை ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான அலுவலா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக உரிய அனுமதியின்றி டிப்பா் லாரியில் 4 யூனிட் அளவுள்ள கிராவல் மண் கொண்டு ஏற்றிச் செல்லப்படுவது தெரிய வந்தது.
பின்னா் அந்த லாரியை கனிம வளத் துறையினா் பறிமுதல் செய்து சென்னிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், டிப்பா் லாரியை ஓட்டிச் சென்ற சென்னிமலை, முத்துராண்டிபாளையத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் பாரத் விமல் (22) என்பவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement