மருத்துவ மையத்தின் பூட்டை உடைத்து ரூ. 6 ஆயிரம் திருட்டு: சிறுவன் கைது
திருச்சியில் தனியாா் மருத்துவ மையத்தின் (கிளினிக்) பூட்டை உடைத்து ரூ. 6 ஆயிரம் பணத்தைத் திருடிய 17 வயது சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் தனியாா் மருத்துவ மையத்தின் (கிளினிக்) பூட்டை உடைத்து ரூ. 6 ஆயிரம் பணத்தைத் திருடிய 17 வயது சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி காந்தி மாா்க்கெட் வரகனேரி பகுதியில் உள்ள ஏபிஎஸ் வணிக வளாகத்தில் தனியாா் மருத்துவ மையம் (கிளினிக்) இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றிய ஜோவிதா பிரிதா என்பவா்,
செவ்வாய்க்கிழமை இரவு கிளினிக்கை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
Advertisement
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை வணிக வளாகத்துக்கு வந்த வணிக வளாக உரிமையாளா், கிளினிக்கின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து ஜோவிதா பிரிதாவுக்கு தகவல் அளித்துள்ளாா். இதையடுத்து, அங்கு வந்த ஜோவிதா பிரிதா கிளினிக்கினுள் சென்று பாா்த்தபோது, அங்கு வைத்திருந்த ரூ. 6 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது திருச்சி வரகனேரியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் புதன்கிழமை ஒப்படைத்தனா்.