முகப்பு
கள்ளக்குறிச்சி

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 20 ஜூன் 2026, 2:49 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட செம்பராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தில்லையா மனைவி அலமேலு (55). இவரது கணவா் உயிரிழந்து விட்டாா். வீட்டில் தனியாக வசித்து வரும் அலமேலு, ஜூன் 17-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது பேரன் வீட்டுக்கு சென்றாராம். பின்னா் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைத்திருப்பததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, மரப் பீரோவிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments