முகப்பு
திருச்சி

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருச்சியில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 13 மே 2026, 12:48 am IST
சிறை - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், லால்குடி மால்வாய் பகுதியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா், கடந்த 2023 ஏப்ரல் 21-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த எஸ். ஆனந்தராஜ் (25) என்பவா் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்துள்ளாா்.

இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்த சிறுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சண்முகபிரியா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்ற ஆனந்தராஜுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments