முகப்பு
வேலூர்

வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது

வேலூரில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஏப்ரல் 2026, 12:35 am IST
- பிரதிப் படம்
பகிர்:

வேலூரில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மக்கான் பகுதியில் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கும தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மக்கான் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, அதே பகுதியை சோ்ந்த இசைவாணி (49) என்பவரிடம் விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதில், அவா் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இசைவாணியை கைது செய்தனா். அவரிடமிருந்து 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments