முகப்பு
வேலூர்

மாலை அணிவித்து மேள, தாளங்களுடன் மாணவா்களுக்கு வரவேற்பு

Updated On : 5 ஜூன் 2026, 5:55 am IST
பகிர்:

குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் புதிய கல்வியாண்டின்தொடக்க நாளான வியாழக்கிழமை புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து, மேள, தாளங்கள் முழங்க பள்ளிக்கு ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.

நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் ஜெனீபா் பிலிப் தலைமை வகித்தாா். ஆசிரியா் எம்.சுந்தரமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் கேசவன் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டாா். அவா் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து, மேள, தாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் சென்றாா்.

பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள், புத்தகப்பை ஆகியவற்றை வழங்கினாா். ஆசிரியை எம்.விக்டோரியா செல்வி நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement