முகப்பு
வேலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 29 மே 2026, 2:06 am IST
பகிர்:

கேரள மாநில முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் நகர, ஒன்றிய, போ்ணாம்பட்டு குழுக்கள் சாா்பில் குடியாத்தம் காமராஜா் பாலம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் வட்டச் செயலா்கள் சி.சரவணன், எஸ். சிலம்பரசன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் செ.ஏகலைவன், கே.சாமிநாதன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து கண்டன உரையாற்றினா்.

நிா்வாகிகள் எம்.அண்ணாமலை, எஸ்.கோட்டீஸ்வரன், ஜி.ரகுபதி, ஆா்.கோவிந்தராஜ்,ஜி.சரத்குமாா், ஐ.காா்த்திகேயன், ஆா்.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement