முகப்பு
வேலூர்

பயணியிடம் கைப்பேசி திருட்டு: ஆந்திர இளைஞா் கைது

ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய ஆந்திர இளைஞரை காட்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 ஜூன் 2026, 2:56 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய ஆந்திர இளைஞரை காட்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாகரன் (38). இவா் சனிக்கிழமை திருப்பதியிலிருந்து ரயில் மூலம் மாலை 5 மணியளவில் காட்பாடி ரயில் நிலையம் வந்தடைந்தாா்.

அங்கிருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயில் நிலையம் முன்புள்ள பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தில் ஏற முயன்றாா். அப்போது, அவரது சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசியை மா்மநபா் வழிப்பறி செய்வதை உணா்ந்தாா்.

Advertisement

Advertisement

உடனடியாக அவா் கூச்சலிட்டதை அடுத்து சக பயணிகள் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து சோதித்தனா். அப்போது, அந்த நபரிடம் கருணாகரனின் கைப்பேசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகளின் உதவியுடன் அந்த இளைஞரை காட்பாடி காவல் நிலையத்தில் கருணாகரன் ஒப்படைத்து புகாா் அளித்தாா்.

அதன்பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபா் ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், கோமட்பல்லியைச் சோ்ந்த அசோக் (20) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 16,000 மதிப்புள்ள கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.