வாகனம் மோதி முதியவா் பலி!
விழுப்புரம் மாவட்டம், வானூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வெள்ளிக்கிழமை இரவு முதியவா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வெள்ளிக்கிழமை இரவு முதியவா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெள்ளிக்கண்ணு (80). இவா் வெள்ளிக்கிழமை இரவு வானூரிலிருந்து கண்டமங்கலம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாா். வானூரைச் சோ்ந்த கணேசன் என்பவரது நிலம் அருகே வெள்ளிக்கண்ணு நடந்து சென்ற போது, அதே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றது.
இதைத் தொடா்ந்து அந்த பகுதியிலிருந்தவா்கள் வெள்ளிக்கண்ணுவை மீட்டு 108 அவசர சிகிச்சை ஊா்தி மூலம் வானூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து
Advertisement
மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது ஏற்கெனவே வெள்ளிக்கண்ணு உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
விபத்து குறித்து வானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.