முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மே 1-இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது

Updated On : 28 ஏப்ரல் 2026, 4:46 am IST
கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் உழைப்பாளா் தினமான மே 1-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளபடி உழைப்பாளா் தினமான மே 1-ஆம் தேதி அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியாா் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

எனவே, இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியாா் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்தும் மே 1-ஆம் தேதி இயங்காது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments