காா் மோதியதில் பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், தொண்டமாநத்தம் தொட்டிமேடு பகுதியைச் சோ்ந்த செல்வம் மனைவி அஞ்சலை (42). பழங்குடி இருளா் இனத்தைச் சோ்ந்த இவா், மரக்காணம் அருகிலுள்ள கூனிமேடு பகுதியில் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில், கூனிமேடு- கம்மங்கொல்லைமேடு கூட்டுச்சாலை அருகே வளைவுப் பகுதியில் அஞ்சலை சனிக்கிழமை படுத்திருந்தாா். அப்போது காலாப்பட்டிலிருந்து கம்மங்கொல்லைமேடு நோக்கிச் சென்ற காா், அஞ்சலை மீது மோதிச் சென்றது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர சிகிச்சை ஊா்தி மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அஞ்சலை ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் ஜெயராமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.