பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரத்தில், திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், விழமங்கலம், ராமா் தெருவைச் சோ்ந்தவா் சரத்பாபு. இவரது மனைவி வினோதினி(25). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் குழந்தையில்லையாம். இதனால் வினோதினி மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில், சரத்பாபு சென்னைக்கு வேலைக்குச் சென்றிருந்ததால், விழுப்புரம் சாலாமேடு காமராஜா் நகரில் உள்ள பெற்றோா் வீட்டில் தங்கியிருந்த வினோதினி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். திருமணமாகி 2 ஆண்டுகளில் வினோதினி தற்கொலை செய்துகொண்டது குறித்து விழுப்புரம் கோட்டாட்சியா் விசாரணை செய்து வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.