இருதய பரிசோதனை முகாம்
பண்ருட்டி ரோட்டரி சங்கம், புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவப் பரிசோதனை முகாம், காந்தி சாலையில் உள்ள சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி
பண்ருட்டி ரோட்டரி சங்கம், புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவப் பரிசோதனை முகாம், காந்தி சாலையில் உள்ள சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
பண்ருட்டி ரோட்டரி சங்கத் தலைவர் டி.சண்முகம் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார். சாரதா வித்யாலயா பள்ளித் தாளாளர் எம்.நடராஜன், முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கப் பொருளாளர் டி.எஸ்.பாலமுருகன் வரவேற்றார்.
முகாமில் சுமார் 350 பேருக்கு இருதய பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இவர்களில் சுமார் 40-பேர் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டது. புதுச்சேரி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி இருதய நல மருத்துவர் பத்ரிநாத் தலைமையிலான குழுவினர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
முகாமுக்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் டி.கே.ஏ.கார்த்திக் செய்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.