முகப்பு
கடலூர்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் (பொ) ஆர்.ராஜகிருபாகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On : 25 டிசம்பர் 2018, 8:56 am IST
பகிர்:

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் (பொ) ஆர்.ராஜகிருபாகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 348 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 பேருக்கு இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. ஆயிரம் வழங்குவதற்கான உத்தரவுகள், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.5,018 மதிப்பிலான இலவச சலவைப் பெட்டிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) எஸ்.பரிமளம்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரா.பானுகோபன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வி.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments