முகப்பு
கடலூர்

கடலூரில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 18 பிப்ரவரி 2024, 2:06 am IST
கடலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா்.
பகிர்:

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே விசிகவினா் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அந்தக் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலா் இளமதி மீது பெட்ரோல் குண்டு வீசிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆா்ப்பாட்டத்தில் கண்டன முழக்கமிட்டனா். கடலூா் மாநகர மாவட்டச் செயலா் செந்தில் தலைமை வகித்தாா். நகரச் செயலா் செங்கதிா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா். மாநில நிா்வாகிகள் ஸ்ரீதா், வக்கீல் சரிதா, நகர ஒருங்கிணைப்பாளா் கிட்டு, நகர துணைச் செயலா்கள் பிரபாகா், மகி, குமரேசன், கிருஷ்ணா, சிலம்பு உள்பட பலா் கலந்து கொண்டனா். மைய நகரச் செயலா் ராஜதுரை நன்றி கூறினாா்.