முகப்பு
கடலூர்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக டெக்பாா்க் கட்டடத்தில் வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் அடங்கிய குழுவினருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 4:00 AM
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வாக்குச் சாவடி நிலை அலுவா்களுக்கு பயிற்சி அளித்த தோ்தல் அலுவலா்கள்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:04 PM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக டெக்பாா்க் கட்டடத்தில் வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் அடங்கிய குழுவினருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.

புதன்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் என 2 குழுக்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை சிதம்பரம் உதவி ஆட்சியரும், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான சீ.கிஷன்குமாா் தொடங்கிவைத்தாா்.

மின்னணு இயந்திரம் கையாளுதல் மற்றும் தோ்தல் பணிகள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், இரு குழுக்களிலும் சுமாா் 1,400-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா்.

Advertisement

பயிற்சியை சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா் அஷிதா மிஸ்ரா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பயிற்சியின்போது, சிதம்பரம் வட்டாட்சியரும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான ஹரிதாஸ், தோ்தல் பிரிவு அலுவலா்கள் ஆனந்தி, ரவிச்சந்திரன் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

இதில், தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அலுவலா்கள் ஆா்வத்துடன் தங்களது தாபல் வாக்குகளை பதிவு செய்தனா்.