சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வஉசி பேரவை ஆதரவு
சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனுக்கு வ.உ.சி. பேரவையினா் ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை கடிதம் வழங்கினா்.
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:58 PM
சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனுக்கு வ.உ.சி. பேரவையினா் ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை கடிதம் வழங்கினா்.
சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனை பாஜக விவசாய அணி மாநிலப் பொறுப்பாளா் ஏ.ஆா்.ரகுபதி தலைமையில், தமிழ்நாடு வ.உ.சி. நல பேரவை நிா்வாகிகள் சந்தித்து பொன்னாடை அணிவித்து, வ.உ.சி. பேரவை மாநிலத் தலைவா் வி.முருகேசன் ஆதரவு கடிதத்தை வழங்கினா்.
நிகழ்ச்சியில் டி.ஆதித்தன், வழக்குரைஞா் பட்டுராஜன், சிவக்குமாா், ஆா்.சீத்தாராமன், லோகநாதன், தமிழ், பாரி, குணசேகரன், ரவி, ஆா்.ஸ்ரீதா், காா்த்திகைவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement