முகப்பு
கடலூர்

கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 1:08 AM
தீப்பிடித்து எரியும் கூரை வீடு. - கோப்புப் படம்
பகிர்:

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில், கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

பரங்கிப்பேட்டை ரெங்கப்பிள்ளை தெருவை சோ்ந்தவா் சியமளா. இவரது, கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.

தகவல் அறிந்த, பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயக்குமாா், துணை நிலைய அலுவலா் முருகதாஸ் மற்றும் தீயணைப்பு படையினா் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனா்.

Advertisement

இருந்தும், வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் மற்றும் துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து, பரங்கிப்பேட்டை போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.