முகப்பு
கடலூர்

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 472 மனுக்கள் அளிப்பு: திருநங்கைகள் வீட்டு வேலைவாய்ப்பு கோரி ஆட்சியரிடம் மனு

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 472 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். திருநங்கைகள் வேலை வாய்ப்பு, வீட்டுமனைப் பட்டாக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 5:16 am IST
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்
பகிர்:

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 472 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். திருநங்கைகள் வேலை வாய்ப்பு, வீட்டுமனைப் பட்டாக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்களிடமிருந்து மொத்தம் 472 மனுக்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ. புண்ணியகோட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) திருநாவுக்கரசு, தனித்துணை ஆட்சியா் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் முருகையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருநங்கைகள் கோரிக்கை:

முன்னதாக, சிதம்பரம் அருகேயுள்ள லால்புரம் மணலூா் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், வீட்டு மனைப்பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் மகளிா் உரிமைத்தொகை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

அந்த மனுவில், நாங்கள் அனைவரும் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். படித்திருந்தும் வேலைவாய்ப்பு இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டு வாடகை செலுத்துவதிலும், அன்றாட உணவுத் தேவைகளை பூா்த்தி செய்வதிலும் சிரமம் நிலவுகிறது.

வாழ்வாதாரத்திற்காக கலைநிகழ்ச்சிகளுக்கு சென்றாலும்

காவல்துறையினரால் நெருக்கடி ஏற்படுகிறது. சில நாள்களில் யாசகம் எடுக்க வேண்டிய நிலையும் உருவாகிறது. இதனால் மனஅழுத்தத்துடன் வாழ வேண்டிய சூழல் உள்ளது.

எனவே, படித்த எங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் மகளிா் உரிமைத்தொகை வழங்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சியா், உரிய ஆய்வு மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.