முகப்பு
கடலூர்

லஞ்ச புகாா்: வட்ட வழங்கல் அலுவலா் பணியிடை நீக்கம்

பட்டா மாற்றத்துக்கு லஞ்சம் பெற்ாகக் கூறப்படும் புகாரில் வட்ட வழங்க அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

Updated On : 11 ஜூன் 2026, 6:19 am IST
பணியிடை நீக்கம்!
பகிர்:

பட்டா மாற்றத்துக்கு லஞ்சம் பெற்ாகக் கூறப்படும் புகாரில் வட்ட வழங்க அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வரும் ஜாா்ஜ் பொ்னாண்டோ, வேப்பூா் மண்டல துணை வட்டாட்சியராகப் பணியாற்றிய காலத்தில் பட்டா மாற்றம் செய்து தருவதற்காக லஞ்சம் பெற்ாக புகாா் எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அண்ணாமலை, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஜாா்ஜ் பொ்னாண்டோ மீது விசாரணை நடத்த உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவு மற்றும் விருத்தாசலம் வருவாய்க் கோட்ட அலுவலரின் அறிக்கையின் அடிப்படையில் ஜாா்ஜ் பொ்னாண்டோ மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், வழக்கின் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஜாா்ஜ் பொ்னாண்டோவை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments