முகப்பு
கடலூர்

சாலை விபத்தில் தையல் கடைக்காரா் உயிரிழப்பு

Updated On : 23 ஜூன் 2026, 12:49 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், முத்தாண்டிக்குப்பம் அருகே சாலை விபத்தில் தையல் கடைக்காரா் உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், கிழக்கு மருதூா் அஞ்சல், சிவாபட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமநாதன் (38). இவா், பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பத்தில் தையல் கடை நடத்தி வந்தாா்.

ராமநாதன் சனிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு பைக்கில் சிவாபட்டினத்துக்கு புறப்பட்டாா். முத்தாண்டிக்குப்பம் - சேந்தநாடு சாலையில் விசூா் அருகே இரவு 11.30 மணியளவில் சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ராமநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments